கோவையை பற்றி கண்ணதாசன்


கண்ணதாசன் எல்லாவற்றையும் அனுபவித்து எழுதும் அற்புத கவிஞர். அவர் கோயம்புத்தூர் மக்களின் பண்பு,பேச்சுவழக்கு ,விருந்தோம்பலை பற்றி ஒரு கவிதையில் எழுதியுள்ளார்.
கோவை மக்கள் எப்போதும் மரியாதையுடன் பேசுவார்கள்.அவர்களின் பேச்சு வழக்கில் மரியாதை மிக அதிகமா இருக்கும்.உதாரணமாக வாங்க,போங்க,உட்காருங்க,சாப்பிடுங்க,தூங்குங்கா,வேணுங்க,ஆமாமுங்க என்பவை.உணவு உபசரிப்பிற்கும் மிகவும் பெயர் பெற்ற ஊர் கோயம்புத்தூர்.


கண்ணதாசனின் கவிதை

 நான் ரசித்த அந்த கவிதை

சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம் பனிவெல்லம் கோவையில்தான்
ஏனுங்க என்னவுங்க ஆமாவுங்க
மானுங்க இருக்குங்க வேணுங்களா

புடுச்சுங்க மலப்பழமும் இருக்குங்க
எடுத்துக்குங்க தேனுங்க கையெடுங்க
சாப்பிடுங்க திருப்பூர் நெய்யுங்க சுத்தமுங்க
ஏனுங்க எழுந்தீங்க உட்காருங்க

ஏபய்யா பாயசம் எடுத்துப்போடு 
அப்பப்பா கோவைக்கு விருந்துவந்தால்
ஆறுநாள் பசியும் வேண்டும்
வயிறும் வேண்டும் தப்பப்பா

கோவைக்கு வரக்கூடாதே
சாப்பாட்டாலே சாகடிப்பார்.

இந்த கவிதையில் கோவை தமிழை அழகாக எழுதியிருப்பார்.

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்