தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் - கோயம்புத்தூர்

1 comments

கோயம்புத்தூர் என்றவுடன் நினைவுக்கு வருவது,தொழிற்சாலைகள், கொங்கு தமிழ், சிறந்த கல்லூரிகள், அடுமனைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கோவை தொழிற்சாலைகள் நிறைந்த ஊர் என்பதே எல்லோருடைய மன பிம்பம் ஆனால் 1950 வரை எல்லா திரைபடங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது என்பதே உங்களால் நம்ப முடிகிறதா. தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சிம்ம சொப்பனமிட்டு இருந்த ஊர் கோவை.

சென்ற பதிவில் தென்னிந்திய சினிமா உருவானதை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவில் கோவை எப்படி சினிமா துறைக்கு பங்காற்றியது என்பதை பார்ப்போம்.


திரைப்படங்களின் தலைநகரம்:

சாமிக்கண்ணு வின்சென்ட் 1914 முதல் திரையரங்கை "Variety Hall Cinema" என்ற பெயரில் Town Hall ல் அமைத்தார். இப்பொது Delite Theatre என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. பின்னர் ர.கே ராமகிருஷ்ணன்,C.N. வேங்கடபதி நாய்டு,S.பீமா செட்டி,S.M.ஸ்ரீராமுலு மற்றும் P.A.ராசு இணைத்து Central Studio's அமைத்தனர். ஸ்ரீராமுலு நாயுடு Pakshiraja Studio யை நிறுவினார். அது தென்னிந்திய சினிமாவின் மகுடமாக விளங்கியது (தற்போது அது கல்யாண மண்டபமாக இயங்குகிறது ). Pakshiraja Studio ல் இருந்து தயாரிக்கப்பட்ட "மலைக் கள்ளன்" மிகப் பெரிய வெற்றி பெற்றது. இது அந்த காலத்தில் 6 மொழியில் எடுக்கப்பட்டது. Coimbatore Talkies , Parameswaran Talkies ,Pakshiraja Studio மற்றும் Central Studios போன்றவை பல வெற்றி படங்களை தயாரித்தன. இந்த Studio கள் யாவும் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்காலத்தில் தென்னிந்தியாவில் வேறு எங்கும் திரையரங்களும், ஸ்டுடியோகளும் இல்லை என்பதே உண்மை.


திலிப் குமார் ,மீனா குமாரி நடித்த Azaad திரைப்படம் Central Studioல் எடுக்கப் பட்டது.இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.Central Studio ல் தங்கும் அறைகள் இருந்தன.அங்கு சினிமா கலைஞர்கள் தங்கிதான் பல படங்களை எடுத்துள்ளனர்.

ஸ்ரீராமுலு ஜகதலப்ரதாபன்,கன்னிகா,மலைக் கள்ளன் போன்ற பல வெற்றி படங்களை கோவையில் தயாரித்தார்.

Ashok Pictures மற்றும் Jupiter production கம்பெனி பல படங்களை இங்கு தயாரித்தனர்.


ராசு செட்டியார் 1937 முருகன் தியேட்டரையும் 1938 ராஜா தியேட்டரையும் நிறுவி Chandra Prabha Pictures என்ற பெயரில் பல படங்களை தயாரித்து வெளியிட்டார். P.A.R விஸ்வநாதன் "Coimbatore Film Distribution Association" கோபலபுரத்தில் நிறுவினார். முதன் முதலில் நகை விளம்பரங்களுக்கு அப்போதைய கதாநாயிகளான அஞ்சலிதேவி மற்றும் வரலட்சுமி யை நடிக்க வைத்தனர். இந்தியாவின் சிறந்த கேமிராக்கள் Projectors பயன்படுத்தப்பட்டன.
N.H Road ல் இருந்த கடைகள் திரைப்படங்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் கிடைத்தன. குறிப்பாக Projectors  அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.


திரைப்படங்களின்  விநியோகம் பெரிய தொழிலாக கோயம்புத்தூரில் இருந்தது. பல நூறு திரைப்பட ஆபீஸ் கோபாலபுரம் ரோட்டில் அமைந்திருந்தது.
ஸ்ரீனிவாச தியேட்டர் ( Broke Bond road ) ,ரெயின்போ  தியேட்டர் ஆங்கில படங்களை திரையிட்டன.ஸ்ரீபதி தியேட்டரில் European படங்கள் சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டன.

சினிமா பிரமுகர்கள் தொடக்க வாழ்க்கை :

இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் பலரின் வாழ்க்கை தொடங்கியது கோயம்புத்தூரில்தான். 1936 ல் சதிலீலாவதி படத்தில் கதாநாயகனாக தனது (19 வயதில்) அறிமுகமானார் M.G.R ( மருதூர் கோபால ராமச்சந்திரன் ). மருதாசலம் செட்டியார் அந்த படத்தை தயாரித்தார். அந்த படத்திற்காக ரூபாய் 100 யை சம்பளமாக பெற்றார் M.G.R.
1936 ல் ஸ்ரீராமுலு நாய்டு தயாரித்த மலைக் கள்ளன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. M.G.R ன்  மற்றொரு வெற்றிப் படமான நாடோடி மன்னன் படத்திற்கு 10 kg வெள்ளி வாழும் ,கேடயங்களை பரிசாக அளிக்கப்பட்டது.அந்த பரிசுடன் N.H ரோட்டு முதல் ராஜா தியேட்டர் வரை ஊர்வலமாக வந்தார் M.G.R அவர்கள்(M.G.R தயாரித்த முதல் திரைப்படம் நாடோடி மன்னன்).



தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான M.K தியாகராஜா பாகவதரின், வேணுகானம்,சொக்கமேல மற்றும் அழிவின் பாடை போன்ற படங்கள் கோவையில் எடுக்கப்பட்டன. சிவாஜி நடித்த மரகதம் படமும்கோவையில் எடுக்கப்பட்டன. கருணாநீதி மற்றும் N.T.R போன்ற அரசியல் தலைவர்களும் தனது திரையுலக வாழ்க்கை இங்கிருந்துதான் தொடங்கினார்.N.S  கிருஷ்ணன் ,T .M சௌந்தரராஜன்,M.K ராதா, T.S பாலைய்யா போன்ற திரையுலக மேதைகளும் தமது வாழ்க்கையை கோவையில் இருந்துதான் தொடங்கினார்கள்.

தேவர் பிலிம்ஸ் கூட கோவையிலிருந்து தொடங்கப்பட்டத்தாகும். கோவையை சேர்ந்த ஜெயசங்கர்,R.சுந்தர்ராஜன்,மணிவண்ணன், சிவக்குமார், பாக்கியராஜ், சத்தியராஜ் ,கிருஷ்ணன் பஞ்சு ,ரகுவரன் போன்றவர்கள் சினிமா துறையில் மிகப் பெரிய பங்காற்றியவர்கள். சினிமாவை வளர்த்த கோவைப் பற்றி உங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.


தொடரும்...
நன்றி : Book:Coimbatore and the World of Cinema , Hindu

உண்மையில் கண்ணகி மதுரையை எரித்தாளா?

0 comments

    சமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்தார். சிலப்பதிகார கதையை தவிர்த்து கண்ணகி பற்றி எந்த விஷயமும் எனக்கு தெரியாது.கண்ணகி என்பது வெறும் கற்பனை பாத்திரமா? இல்லை உண்மையில் அவள் வாழ்த்தாளா? என்ற கேள்வி எனக்குள் கண்ணகி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.கண்ணகி பற்றி நான் சேகரித்த விஷயங்களை இந்த பதிவில் தருகிறேன்.

மதுரையை எரித்தாளா:

    கண்ணகி மற்றும் கோவலன் கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே(அதனால் மீண்டும் அதை நான் இங்கு எழுதவில்லை). சிலப்பதிகாரத்திற்கு என்று ஒரு தனி சிறப்புண்டு. உலகில் உள்ள எந்த இலக்கியமும் வணிகரை பேசியது கிடையாது, ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டும்தான் வணிகரை பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.கோவலனும் மாதவியும் கூட வணிக குலத்தை சேர்ந்தவர்கள்தான்.கோவலன் இறந்தவுடன், தன் கணவருக்கா பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் வாதாடி,கோவலன் குற்றமற்றவன் என்பதை நிருபித்துவிட்டு பின் கோபத்தில் மதுரையை எரித்தாள் என்பதுதான் வரலாறு என்றாலும், ஒரு சிலர் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்.

    கோவலன் வணிக குலத்தை சேர்த்தவன், அவன் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன்,மதுரையில் உள்ள வணிகர்கள் கோபப்பட்டு, தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக சில இடங்களில் தீ வைத்தாகவும்,அந்த செய்தி மதுரை முழுவதும் பரவியதாகவும், நாளிடைவில் அந்த செய்தி மருவி கண்ணகி மதுரையை எரித்தாள் என்று கூறப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.

அழிக்கப்பட்ட கண்ணகியின் சிலைகள்:

   கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது சிலப்பதிகாரம். கண்ணகிக்கு கேரளா,இலங்கை என்று பல இடங்களில் கோவில்கள் உண்டு, ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் கோவில்கள் கிடையாது என்ற செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது.( மதுரையில் மட்டும் செல்லத்தம்மன் என்ற ஒரே ஒரு கண்ணகி கோவில் மட்டும்தான் உள்ளது). மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையையும், தன் முன்னோர்களையும் தெய்வமாக வணங்கினான். அந்த மாதிரியான தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டன.

    குறிப்பாக பெண் தெய்வங்கள் யாவும் வஞ்சிக்கப்பட்ட பெண்களாகும். அவர்களின் தியாகத்திற்காக அவர்கள் தெய்வமாக்கப்பட்டார்கள். இப்படி பல பெண் தெய்வங்கள் தமிழ்நாட்டிலுண்டு. அப்படியானால் கண்ணகிக்கு என்று கண்டிப்பாக பல கோவில்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் இந்த சிறு தெய்வங்கள் யாவும் பிற்காலத்தில் எழுச்சி பெற்ற சைவ,வைணவ,சமண, பௌத்த கடவுள்களால் சூரையாடப்பட்டன.சில தெய்வங்கள் பெரிய தெய்வமாக வேறு பெயர்களாக மாற்றப்பட்டன.கண்ணகிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது.

கண்ணகி கோவில்கள் பத்தினி என்ற பெயரில் பெண் தெய்வமாக புத்த துறவிகளாலும், கண்ணகி அம்மனாக தமிழர்களால் இலங்கையில் வழிபடப்படுகிறது. கேரளாவில் கொடுங்கநல்லூர் பகவதி ,மங்கள தேவி ,அட்டுகல் அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது.

செல்லத்தம்மன் கோவில்



Chellathamman
தமிழ் நாட்டில் உள்ள ஒரே கண்ணகி கோவில் இந்த செல்லத்தம்மன் கோவிலாகும்.

மங்கள தேவி கண்ணகி கோவில்:

   இந்த கோவில் தமிழ்நாடு,கேரளா எல்லையில் உள்ள வண்ணதிபாறை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது.கண்ணகியை தெய்வமாக வணக்கிய வேடுவர்கள் சித்திரா பௌர்ணமியன்று விழா எடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போதும் அன்று ஒருநாள் மட்டும் விழா நடக்கிறது.

mangaladevi temple

    மதுரையை எரித்தபின் தென்திசை வழியாக 14 நாள் நடந்து இவ்விடத்துக்கு வந்தாள். அப்போது விண்ணுலகிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த மலைவாழ் மக்களான வேடுவர்கள்,அவளை தெய்வமாக பாவித்து "மங்கள தேவி" என்ற பெயரில் வணங்கினர்.

    ஒரு சமயம் சேரன் செங்குட்டுவன், இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அவனிடம் மக்கள் தாங்கள் கண்ட அதிசயத்தைக் கூறினர். மகிழ்ந்த மன்னன் , இங்கு வந்தது கண்ணகி என அறிந்து மகிழ்ந்தான். சிலப்பதிகாரம் சொல்லும்  ' "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்" ' என்னும் வாசகத்துக்கு ஏற்ப , இங்கு அவளுக்கு கோயில் எழுப்ப விருப்பம் கொண்டான். இதற்காக இமயத்திற்கு சென்று கல் எடுத்து , அதை கங்கையில் நீராட்டி , கண்ணகிக்கு சிலை வடித்தான் , இங்கு கோயில் கட்டி சிலையைப் பிரதிஷ்டை செய்தான்.

கொடுங்கநல்லூர் பகவதி கோயில்

Kodungallur Bhagavathy

   இந்த கோவில் கேரளாவில் உள்ள திரிசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் குறும்பா பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்மன் எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். அசுரரின் தலை ,வாழ் , மணி , சிலம்பம் என்று ஒவ்வொரு கையில் ஒரு பொருளை ஏந்தி உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.இந்த கோயில் சேரன் செங்குட்டுவனால் கண்ணகிகாக கட்டப்பட்ட கோயிலாகும். அம்மன் கையில் உள்ள சிலம்பம்தான், கண்ணகியின் கால் சிலம்பு என்று கூறுகிறார்கள் .

அட்டுகால் கோயில் :

   கண்ணகி கடைசியாக வந்து அமர்ந்த இடம் கொடுங்கநல்லூர் பகவதி கோயில். அந்த கோயிலுக்கு வரும் வழயில் அட்டுகால் வந்தடைந்தாள் கண்ணகி. அங்கு சிறுமியின் உருவம் எடுத்த கண்ணகி, அங்குள்ள ஆற்றை கடக்க உதவுமாறு அங்குள்ள ஒரு வயதானவரை கேட்டதாகவும் , அவர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் அந்த இடத்திலிருந்து மறைந்ததாகவும், அந்த முதியவரின் கனவில் வந்து தனக்கு ஒரு கோயில் கட்ட சொன்னதாகவும் , அவர் கட்டிய கோயில்தான் அட்டுகால் கோயிலாகும் .

கண்ணகி அம்மன் - இலங்கை :

Vatrappalai-Kannaki-Amman-Kovil

   வற்றாப்பாளை கண்ணகி அம்மன் கோயில் முல்லைதீவு மாவட்டத்தில் உள்ளது. மதுரையை எரித்த பின் கண்ணகி பத்தாவது இடமாக இலங்கையில் ஓய்வெடுத்த இடமாக அறியப்படுகிறது. இலங்கையில் உள்ள எல்லா பக்தர்களும் வைகாசி விசாகம் தேதியில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து தங்கள் வேண்டுதலை அம்மனிடம் முறையிடுவார்கள்.

பத்தினி கோவில் :

pattini

   சிங்கள புத்த துறவிகளை பொறுத்தவரை பத்தினி என்பது புத்த மதத்தை காக்கும் தெய்வமாகும். சிங்கள மத கருத்துப்படி, பத்தினி அம்மன் கண்ணகியின் வடிவமெடுத்து, மூன்று கண்களுடன் பிறந்த கொடிய பாண்டிய மன்னனை அழித்தாக கருதப்படுகிறது. முதலாம் கஜபாதான் இலங்கைக்கு சிலப்பதிகாரத்தையும், கண்ணகியையும் அறிமுகம் செய்தார். அப்போது கண்ணகி கிரி அம்மா (Milk mother) என்ற பெயரில் வணங்கப்பட்டாள். இலங்கையில் கண்டி,முல்லைதீவு,மெடகொட,பனாமா,மாது,தேடிகமா,கடுவெல போன்ற பல இடங்களில் கோவில்கள் உள்ளன.

இவ்வாறு கேரளா,இலங்கை போன்ற இடங்களில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் பெண்ணிற்கு, ஒரு கோவில் கூட இல்லாததும்,இருந்த ஒரு சிலையை அகற்றிய பெருமை தமிழகத்திற்க்கு மட்டுமே சாரும்.

வேர்களையும், பழமையையும் தொலைத்துவிட்டு வெறும் மேற்கத்திய மோகத்தில் வாழ்வது எந்த பயனையும் நமக்கு தராது.
நமக்கென்று உள்ள பழக்கவழக்கத்தையும் பாரம்பரியத்தை மீட்டு எடுப்போம்.

 
  • தமிழ் ஆவணம்