தென்னிந்திய சினிமா உருவான வரலாறு - (கோவை)

இன்று வாழும் ஒருவரிடம் தென்னிந்திய சினிமா எங்கு தோன்றியது என்று கேட்டால் உடனே சொல்லும் பதில்சென்னைதான். இதில் என்ன சந்தேகம். எல்லா Studio களும் இங்குதான் உள்ளன. எல்லா திரைப்பட கலைஞர்களும் சென்னையில்தான் வசிக்கிறார்கள் பிறகு வேறெங்கு இருக்கும்? ஆனால் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தால் தென்னிந்திய சினிமா தோன்றியது கோயம்புத்தூரில் என்பதை நம்ப முடிகிறதா?

Samikannu Vincent

சினிமா உலகிற்கு அறிமுகபடுத்தப்பட்டு சரியாக பத்து வருடத்தில் கோயம்புத்தூரை சார்ந்த ஒரு சாதாரண 21 வயது இளைஞன் சினிமாவை தென்னிந்தியாவிற்கு கொண்டு வந்தார் அவர் பெயர் "சாமிக்கண்ணு வின்சென்ட்". சவுத் இந்தியன் ரயில்வேஸில் 25 RS சம்பளத்திற்கு கிளர்க்காக வேலை செய்தவர் சாமிக்கண்ணு. அவர் கோயம்புத்தூரில் உள்ள கோட்டை மேட்டில் பிறந்தவர்.
( 18 ஏப்ரல் 1983 to 22 ஏப்ரல் 1942). ஆரம்பகால பிரெஞ்சு மொழியின் பேசாத திரைப்படங்கள் மீது இவருக்கு ஆசை அதிகமானது. 1905 பிப்ரவரி மாதம் 2,250 Rs ஒரு பிரெஞ்சு சினிமா அதிபரிடம் ( Du Pont ) இருந்து சினிமா ஒளிபரப்பும் Projector வாங்கினார்.


Samikannu Vincent

பின்னர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு படங்களை எல்லா ஊர்களுக்கும் சென்று திரையிட்டார். இவர் எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்து டென்ட் அமைத்து படங்களை மக்களுக்கு காட்டினார். "Life of Jesus" என்ற படம் மக்களின் மத்தியில் பிரபலமானது இப்படிதான் டென்ட் சினிமா உருவானது. இவர் சிங்கப்பூர் ,மலேசியா ,பெஷாவர்,மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் பயணம் செய்து தனது படங்களை திரையிட்டார். 1905 ம் ஆண்டு தனது முதல் Tent சினிமாவை Edison's Grand Cinema Mega Phone என்ற பெயரில் வெளியிட்டார்.

Variety Hall Theatre

1914 ம் ஆண்டு முதன் முதலில் சினிமா தியேட்டரை தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் Variety Hall Talkies என்ற பெயரில் திறந்தார். இன்று Delite தியேட்டர் என்ற பெயரில் இயங்குகிறது. இந்த திரையரங்கம்தான் Madras Province ன் ( Madras Province என்பது தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் ஒரு சில இடங்கள் சேர்த்த பகுதியாகும்) முதல் திரையரங்கம். 1919 ல் மின்சாரத்தில் இயங்கக்ககூடிய "Power-driven Rice and Flour மில்லை கோவையில் திறந்தார். Vincent Forces Cinema என்ற பெயரில் திருச்சி ரோட்டில் ஒரு டூரிங் டாகீஸ்யை பிரிட்டிஷ் வீரர்கள் ஆங்கில படம் பார்பதற்காக உருவாக்கினர். சாமிக்கண்ணு வின்சென்ட் கோவையில் 12 தியேட்டரை திறந்தார்.

ஆங்கில படங்களை திரையிடுவதற்கு Rainbow தியேட்டரை திறந்தார். R.S புறத்தில் Light House தியேட்டரை திறந்தார் அதில்தான் முதன் முதலாக அன்னபூர்ணா சிறிய கேண்டீன் மூலம் பயணத்தை தொடங்கினார்கள். தற்போது அந்த திரையரங்கம் Kennedy Theatre என்று அழைக்கப்படுகிறது. Variety Hall Talkies திலிப் குமாரின் பல ஹிந்தி படங்களை திரையிட்டன அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன. Edison மற்றும் Carnatic தியேட்டர்களில் தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.

Delite Theatre

1933 ம் ஆண்டு Pioneer Film Company மற்றும் Calcutta கம்பெனியுடன் இணைந்து சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் "வள்ளி" என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.மேலும் Calcutta நிறுவனம் தயாரித்த "வள்ளி திருமணம்" என்ற படத்தை அவரின் திரையரங்குளில் வெளியிட்டார் அந்த படம் வசூலில் வரலாற்று சாதனை பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து சம்பூர்ண ஹரிசந்திரா என்ற படத்தை தயாரித்தார். 1935 ம் ஆண்டு "சுபத்ர பரிணயம்" என்ற படத்தை தன்னுடைய Variety Hall Talkies என்ற பெயரில் தயாரித்தார்.

இவ்வாறு சினிமாவை தென் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய மனிதரை பற்றி எந்த குறிப்பும் மக்களிடையே இல்லை.இந்திய சினிமாவின் முதல் கோட்டீஸ்வரர் சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவார்.

இந்த பதிவின் மூலம் அவரை நினைவுப்படுத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவில் கோவையில் எடுக்கப்பட்ட படங்களை பற்றி காண்போம்.

தொடரும்...

நன்றி : Book:Coimbatore and the World of Cinema , Hindu

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்